Sunday, August 18, 2019

Sampar Morekulambu

சாம்பார் மோர்க்குழம்பு.
 தேவை:---நறுக்கிய வெங்காயம்---1கப்
நறுக்கிய தக்காளி:--1கப்
முருங்கைக்காய்---1கப்  நறுக்கியது
 ஊற வைத்து அரைக்க:---பூண்டு2பல்
கொத்தமல்லி விதை, சீரகம், பொட்டுக்கடலை,  தலா11/2டீஸ்பூன்;  பச்சை மிளகாய்;தேங்காய்
துருவல்,அரைக்கப், அரைத்துக்கொள்ளவும்
 வேக வைத்த  துவரம் பருப்பு----1கப்
 கறி வேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயப்பொடி------சிறிதளவு
கெட்டியாக  கடைந்து மோர்:----1கப்
செய்முறை:------வாணலியில், தேங்காய் எண்ணெய் ஊற்றி,கடுகு, சீரகம் , மிளகாய் வத்தல்ஒன்றையும்,  தாளித்து, பின்பு. வெங்காயம் போட்டு. வத்க்கி, தக்காளியையும் போட்டு வதக்கவும்.முருங்கைக்காயையும் சேர்க்கவும்.சிறிது தண்ணீர்  விட்டு காயை  வேக விடவும்.
பின்பு அரைத்த , மசாலாவையும் போட்டு, நன்கு கொதிக்க விடவும். 5நிமிடம்.  கழித்துமோரைச்சேர்க்கவும். கொதி. வருவதற்குள், பருப்பை கரைத்து ,ஊற்றி, உப்பையும்
 சேர்க்கவும். பின்பு, கறிவேப்லை, கொத்தமல்லி, சேர்த்து, பெருங்காயப்பொடிப் போட்டுநன்கு  கிளறி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
 மிக ருசியான, மணம் மிகுந்த  சாம்பார்.செய்து பார்த்து விட்டு,,உங்கள் கருத்துக்களை,
 girija46@ iCloud.com என்ற மெயிலுக்கு அனுப்பவும்

Wednesday, July 31, 2019

கோதுமை கடலை மாவு கட்லெட

தேவை:--கோதுமை மாவு, கடலை மாவு  தலா:---1கப்
வேகவைத்து. தோல் உரித்த. உருளைக்கிழங்கு--1;கொத்தமல்லி தழை, புதினா தழை,அலம்பி, ஆய்ந்தது---தலா--1கப்பு.பச்சை மிளகாய்------2,
உப்பு-----தேவையான அளவு. சீரகப்பொடி, ---1/2டீஸ்பூன்
செய்முறை:----புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை நன்றாக அரைத்து, அதனுடன் உருளைக்கிழங்கையும், உப்பு, சீரகப்பொடியையும், சேர்த்துநன்கு, பிசைந்து , மசாலாவை, ரெடிசெய்துவைத்துக்கொள்ளவும்.பின்பு கோதுமை மாவையும், கடலை மாவையும்,கலந்து,2டீஸ்பூன்
 எண்ணெய்யும், ஊற்றி ஈனோவை  கரைத்து , ஊற்றி, உப்பு  போட்டு,இட்லி மாவு பத த்திற்கு கரைத்துக் கொள்ளவும்.பின்பு , 4கிண்ணத்தில்,எண்ணெய் தடவி,முதலில் கொஞ்சம் மாவு  ஊற்றி,
பின்பு அதன்மேல் கிளறி. வைத்த மசாலாவை கொஞ்சம்  போட்டு, அதன்மேல், திரும்பியும்
மாவை  ஊற்றி, குக்கரில்வேகவைத்து ( லெட்  போடாமல்)10 நிமிடம், வேக விடவும்.ஆறியபிறகு
 தட்டில் வைத்து   நான்காக. வெட்டவும். வாணலியில். எண்ணெய் ஊற்றி,  வெட்டிய  கட்லெட்டுகளை, இரு பக்கமும் நன்கு. கோல்டன் கலராக. வரும் வரை வத்க்கி உண்ணவும்.
மிகவும், ருசியானதும் மணமானதும்  ஆகும்.
   செய்து பார்த்து உங்கள்  கருத்துக்களை,girija46@icloud.comஎன்ற இ மெயிலுக்கு அனுப்பவும்.


பொரி தோசை

பொரி தோசை
 தேவை:---பொரி---2கப்
அரிசி:---1கப்

தேங்காய் துருவல்----1/2கப்
 செய்முறை:--- பொரியையும், அரிசியையும், ஊறவைத்துக்கொள்ளவும் ஒருமணி. நேரம் கழித்து
இரண்டையும் சேர்த்து, அதனுடன், தேங்காயையும், சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்
நன்கு அரைத்த. பிறகு , தோசை   வார்க்கவும்.
 சைட் டிஷ்:-தக்காளித் தொக்கு,  தேங்காய், கொத்தமல்லி. சட்னி இருந்தால், மிகவும் ருசியாகவும்
மணமாகவும்.  இருக்கும்
செய்து  பார்த்து விட்டு,உங்கள்  கருத்துக்களை, girija46@icloud.com என்ற இ-மெயிலில் அனுப்பவும்

Wednesday, March 20, 2019

Masala mathan

மசாலாமத்தன்.
 தேவை:---பரங்கிக்காயைபெரிய, பெரிய   துண்டுகளாக வெட்டிக்கொலை கொள்ளவும்:---1கப்
நறுக்கிய  சின்ன வெங்காயம்:----1கப்
நறுக்கிய  தக்காளி:----1கப்,குடைமிளகாய் நறுக்கியது:---1கப்
 சாம்பார் பொடி:--தேவையான அளவு; கறிவேப்பிலை, கொத்தமல்லி:---சிறிதளவு
பட்டாணி:---1/2கப், தேங்காய்:---1கப்
செய்முறை:---அடுப்பில்  வாணலியை ஏற்றி, தேவையான அளவு எண்ணெயை ஊற்றி,வெங்காயத்தையும், குடை மிளகாயை யும், பட்டாணி. நன்கு வதக்கவும்.
பரங்கிக்காயையும், தக்காளியையும்,  அவனில்  8நிமிடம் வைத்து, எடுத்துவைத்துக்கொள்ளவும்
நன்கு. வதக்கிய, வெங்காயத்துடன், அவனிலிருந்து  எடுத்த. காயையும், சேர்க்கவும். பின்பு
சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, தேங்காய்  பட்டாணி, சிறிதளவு. சர்க்கரை  சேர்த்து
நன்கு. வதக்கவும். பின்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி,சேர்க்கவும்.
 இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி  எல்லாவற்றிற்கும்   இணைத்து உண்ண மிகவும்  ,சுவையாக
 இருக்கும். சுலபமாக  செய்யக்கூடியது.சுவையும், மணமும் உள்ள, இந்த டிஷ்ஷை
பெரியோர்  முதல், சிறியோர, வரை  எல்லோரும் விரும்பி. உண்பர்
உங்கள் கருத்துக்களை girija46@icloud.com  என்ற  இ மெயிலில்  எழுதவும்.

Thursday, March 14, 2019

Madurvada


மதுர்வடை
தேவை:-அரிசிமாவு, கோதுமை மாவு, வெள்ளை ரவை,மைதா
மாவு  இவை அனைத்தும்,1:1 என்ற அளவிற்கு  கலந்து கொள்ளவும்
ஒருபச்சைமளகாய், சிறிதளவு  இஞ்சி ,துருவிப்போடவும்
சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை,இவற்றையும்
போட்டு,கொஞ்சம்எண்ணெயை காய்வைத்து, ஊற்றி,
தேவையான அளவு உப்பும் போட்டு,லேசாக தண்ணீர் தெளித்து
 நன்கு பிசையவும்.பெருங்காயப்பொடி சேர்க்கவும்
செய்முறை:---அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெயை
காயவைக்கவும். நறுக்கி. வைத்துள்ள வெங்காயத்தைசேர்த்து
 பிசைந்து,சிறு சிறு வடைகளாகத் தட் டவும்.
மிகவும் ருசியும், மணமும் மிகுந்தது. விருந்தினர் வந்தால்,
 அவர்களுடன், பேசிக்கொண்டே  தட்டி விடலாம். மதுர்வடை
மதுரமானதுடன், மிகவும்  மெதுவாகவும் இருக்கும்
 உங்களுடைய கருத்துக்களை  , என்னுடைய , இ -மெயில்
 girija46@icloud.com  என்ற  மெயிலுக்கு அனுப்பவும்.


Monday, February 11, 2019

Parankikai payasam

பரங்கிக்காய்  பாயசம்
தேவை:--பரங்கிக்காய்:--8துண்டுகள்
தலா4பாதாம்பருப்பு,முந்திரிபருப்பு,1ஸ்பூன்ஏலக்காய்
சர்க்கரை1/2கப் , குங்கும்ப்பூ  இருந்தால்4இதழ்
செய்முறை:----பரங்கிக்காய்,பாதாம்,முந்திரி, ஏலக்காய்
எல்லாவற்றையும், நன்கு, அரைத்துக் கொள்ளவும்பின்பு
 அதை பாத்திரத்தில், ஊற்றி ,ஒரு.  கொதி  விடவும்.
பின்பு, சர்க்கரை, சேர்த்து,ஒரு கொதி  விட்டு,  பாலையும்,
குங்கும்பபூவும், சேர்த்து நன்கு  கலந்து  பின்பு, இறக்கி
விடவும்
பரங்கிக்காயில் செய்தது  போல் தெரியவே   தெரியாது.
பாதாம்கீர்  போல்,மிகுந்தமணத்துடன் காணப்படும்.
எல்லோரும், விரும்பி  பருகுவர்.
கருத்துக்களை girija46@ iCloud.comஎன்ற இ-மெயிலுக்கு
அனுப்பவும்.







Saturday, February 9, 2019

Rawmorekulamboo

பச்சை  மோர்க்குழம்பு
தேவை:--கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்புசீரகம்தலா
1டீஸபூன்,சிறிதளவு, எண்ணெய்விட்டு வறுக்கவும்
தேங்காய்:----1/4கப்
மிளகாய்வத்தல்:---2
தயிர்:---கடைந்த  கெட்டி மோர்:---2கப்
செய்முறை:--மசாலாவை அரைத்து மோரில் கலந்து
 ,தேங்காய்எண்ணெயில், கடுகு,சீரகம், தாளித்து,
 தேவையான உப்பும்போட்டு, மேலே கறிவேப்பிலை,
கொத்தமல்லி போட்டு பெருங்காயப்பொடி போட்டு,நன்குகலந்து
வைக்கவும்
ருசியானது,மணமானதும்கூட. அவசரசமயத்தில் விருந்தினர்
வந்தால்உடனே இதை செய்து விடலாம்.
கருத்துக்களை girija46@icloud.comஎன்ற முகவரிக்கு
அனுப்பவும்.