Wednesday, March 20, 2019

Masala mathan

மசாலாமத்தன்.
 தேவை:---பரங்கிக்காயைபெரிய, பெரிய   துண்டுகளாக வெட்டிக்கொலை கொள்ளவும்:---1கப்
நறுக்கிய  சின்ன வெங்காயம்:----1கப்
நறுக்கிய  தக்காளி:----1கப்,குடைமிளகாய் நறுக்கியது:---1கப்
 சாம்பார் பொடி:--தேவையான அளவு; கறிவேப்பிலை, கொத்தமல்லி:---சிறிதளவு
பட்டாணி:---1/2கப், தேங்காய்:---1கப்
செய்முறை:---அடுப்பில்  வாணலியை ஏற்றி, தேவையான அளவு எண்ணெயை ஊற்றி,வெங்காயத்தையும், குடை மிளகாயை யும், பட்டாணி. நன்கு வதக்கவும்.
பரங்கிக்காயையும், தக்காளியையும்,  அவனில்  8நிமிடம் வைத்து, எடுத்துவைத்துக்கொள்ளவும்
நன்கு. வதக்கிய, வெங்காயத்துடன், அவனிலிருந்து  எடுத்த. காயையும், சேர்க்கவும். பின்பு
சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, தேங்காய்  பட்டாணி, சிறிதளவு. சர்க்கரை  சேர்த்து
நன்கு. வதக்கவும். பின்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி,சேர்க்கவும்.
 இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி  எல்லாவற்றிற்கும்   இணைத்து உண்ண மிகவும்  ,சுவையாக
 இருக்கும். சுலபமாக  செய்யக்கூடியது.சுவையும், மணமும் உள்ள, இந்த டிஷ்ஷை
பெரியோர்  முதல், சிறியோர, வரை  எல்லோரும் விரும்பி. உண்பர்
உங்கள் கருத்துக்களை girija46@icloud.com  என்ற  இ மெயிலில்  எழுதவும்.

Thursday, March 14, 2019

Madurvada


மதுர்வடை
தேவை:-அரிசிமாவு, கோதுமை மாவு, வெள்ளை ரவை,மைதா
மாவு  இவை அனைத்தும்,1:1 என்ற அளவிற்கு  கலந்து கொள்ளவும்
ஒருபச்சைமளகாய், சிறிதளவு  இஞ்சி ,துருவிப்போடவும்
சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை,இவற்றையும்
போட்டு,கொஞ்சம்எண்ணெயை காய்வைத்து, ஊற்றி,
தேவையான அளவு உப்பும் போட்டு,லேசாக தண்ணீர் தெளித்து
 நன்கு பிசையவும்.பெருங்காயப்பொடி சேர்க்கவும்
செய்முறை:---அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெயை
காயவைக்கவும். நறுக்கி. வைத்துள்ள வெங்காயத்தைசேர்த்து
 பிசைந்து,சிறு சிறு வடைகளாகத் தட் டவும்.
மிகவும் ருசியும், மணமும் மிகுந்தது. விருந்தினர் வந்தால்,
 அவர்களுடன், பேசிக்கொண்டே  தட்டி விடலாம். மதுர்வடை
மதுரமானதுடன், மிகவும்  மெதுவாகவும் இருக்கும்
 உங்களுடைய கருத்துக்களை  , என்னுடைய , இ -மெயில்
 girija46@icloud.com  என்ற  மெயிலுக்கு அனுப்பவும்.