Friday, March 27, 2020

Panneer. 65

      பன்னீர்---65
தேவை:--பன்னீர்  சதுரம் , சதுரமாக, கனமாக இல்லாமல், லேசாக வெட்டி வைத்துக்  கொள்ளவும்.
சாட் மசாலா:--2டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்ப்பொடி---1டீஸ்பூன்
 செய்முறை:-- வெட்டி வைத்துள்ள பன்னீரின்மேல்,  உப்பு சாட்மசாலா , மிளகாய்ப் பொடி
 லேசாக தூவி விடவும். இதை கெட்டித்தயிரில்,(2டீஸ் பூன்) ஊற வைக்கவும் 5நிமிடம் கழித்து
 வாணலியை அடுப்பில் ஏற்றி,  வெண்ணெய் 2 டீஸ்பூன்  போட்டு அது உருகியவுடன்,
அடுப்பை  மிகவும், லேசான தீயில் வைத்து  மசாலா மேலே இருக்கு மாறு,
போட்டு. உடனே எடுத்து விட வேண்டும்,
  இந்த  பன்னீரை,  5,6    துண்டுகள்  தான். உண்ண முடியும் ஆனால் மிகவும்
 ருசியானது.சிறியோர்முதல்,  பெரியோர்  வரை, விரும்பி. உண்பர்
உங் களுடைய  கருத்துக்களை girija46@icloud.com. என்ற இ மெயிலில்
 அனுப்பலாம். வரவேற்கப்படுகின்றன.


Sambar more kulambu

சாம்பார் மோர்குழம்பு
தேவை:--மோர் கடைந்தது:-2கப்
மோரில்,உப்பு, குழம்புப் பொடி--1டீஸ்பூன், மஞ்சள்பொடி:--1/2 டீஸ்பூன்
உரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம்,    உங்களுக்கு தேவையான காய்கள், வேக வைத்து மோரில்  போடவும். தேங்காய்எண்ணெயில், கடுகு , சீரகம், பச்சை மிளகாய், வரமிளகாய்ப்
வதக்கி, அத்துடன் காய்களையும் வதக்கிப் மோரில் போடவும். பெருங்காயம்சேர்க்கவும
 கடலை மாவு 1டீஸபூன் போட்டு நன்கு கலக்கவும்
செய்முறை:---கலந்த மோர்ஸ் அடுப்பில். வைத்து, வேகவைத்த பருப்பை 3கரண்டி கலந்து
நன்கு பொங்கி வரும்வரை வைத்து இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  நல்ல ருசியும் மணமும் மிகுந்த குழம்பு  சாத்த்திற்கும், தோசை, இட்லி   சேவை
 எல்லா வற்றிற்கும், ஏற்ற. சைட். டிஷ்

Monday, March 9, 2020

உருளைக்கிழங்கு பட்டாணி சேவை

உருளைக்கிழங்கு பட்டாணிசேவை
தேவை:-:-வேகவைத்து உரித்த நறுக்கிய உருளைக் கிழங்கு:--1கப்
பட்டாணி:-  1கப் பெரிய வெங்காயம்  நறுக்கியது:--1கப்
பிழிந்த சேவை3:- கப்
பச்சை மிளகாய்:--2நறுக்கியது
 கறி வேப்பிலை, உப்பு, பெருங்காயப்போடி:-- தேவையான்அளவு
 செய்முறை:----வாணலியில் , கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தையும் பட்டாணியையும்
வத்க்கி,பின்பு உருளையையும்சேர்த்து, கிளறி,சிறிது மஞ்சளபொடி சேர்த்து,, வத்க்கி சேவையை யும்
சேர்த்து கிளறி, கறிவேப்பிலை, பெருங்காய்ப்பொடியையும்போட்டு,  நன்கு வத்க்கி இறக்கவும்
           மணமும் ருசியும் மிகுந்த சேவை உடலுக்கு மிகவும் நல்லது. ப்பெரியோர்முதல் சிறியோர் வரை விரும்பி உண்பர். இரவு நேர டிபனுக்கு உக்ந்தது

உங்கள் கருத்துக்களை girija46@icloud.com என்ற இ -மெயிலில் பதிவு செய்யலாம்

Friday, February 28, 2020

சேனைக்கிழங்கு கூட்டு

சேனைக்கிழங்கு கூட்டு
 தேவை:--
பொடியாக நறுக்கிய  சேனைக்கிழங்கு2கப்
வறுத்து அரைக்க:-- கடுகு1டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு:--2டீஸ்பூன்,
கொத்தமல்லி விதை:---3டீஸ்பூன்;மிளகாய்வத்தல்-2;துருவிய தேங்காய்
1/2கப்,:இவற்றை  வறுத்து அரைத்துக்கொள்ளவும்.புளி:-எலுமிச்சங்காய்
அளவு.கறிவேப்பிலை,கொத்தமல்லிதழை, பெருங்காயம், உப்ப
 தேவையான அளவு சேர்க்கவும்.
செய்முறை:---வாணலியில் எண்ணெய்ஊற்றி , கடுகு தாளித்து,
 சேனையை நன்கு  வதக்கவும். பின்பு புளியைகரைத்து ஊற்றி, 2 கொதி
 வந்தவுடன் அரைத்த மசாலாவையும், போட்டு உப்பும் போட்டு
நன்கு கொதிக்க விட்டு, கறிவேப்பிலை,கொத்தமல்லி,
 பெருங்காயம், போட்டு இறக்கி விடவும். மிகவும்
ருசியானது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,  மிகவும்
இணையானது.
செய்துபார்த்து,  கருத்துக்களை girija46@icloud.com
என்ற மெயிலுக்கு  அனுப்பலாமா.

         




Sunday, August 18, 2019

Sampar Morekulambu

சாம்பார் மோர்க்குழம்பு.
 தேவை:---நறுக்கிய வெங்காயம்---1கப்
நறுக்கிய தக்காளி:--1கப்
முருங்கைக்காய்---1கப்  நறுக்கியது
 ஊற வைத்து அரைக்க:---பூண்டு2பல்
கொத்தமல்லி விதை, சீரகம், பொட்டுக்கடலை,  தலா11/2டீஸ்பூன்;  பச்சை மிளகாய்;தேங்காய்
துருவல்,அரைக்கப், அரைத்துக்கொள்ளவும்
 வேக வைத்த  துவரம் பருப்பு----1கப்
 கறி வேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயப்பொடி------சிறிதளவு
கெட்டியாக  கடைந்து மோர்:----1கப்
செய்முறை:------வாணலியில், தேங்காய் எண்ணெய் ஊற்றி,கடுகு, சீரகம் , மிளகாய் வத்தல்ஒன்றையும்,  தாளித்து, பின்பு. வெங்காயம் போட்டு. வத்க்கி, தக்காளியையும் போட்டு வதக்கவும்.முருங்கைக்காயையும் சேர்க்கவும்.சிறிது தண்ணீர்  விட்டு காயை  வேக விடவும்.
பின்பு அரைத்த , மசாலாவையும் போட்டு, நன்கு கொதிக்க விடவும். 5நிமிடம்.  கழித்துமோரைச்சேர்க்கவும். கொதி. வருவதற்குள், பருப்பை கரைத்து ,ஊற்றி, உப்பையும்
 சேர்க்கவும். பின்பு, கறிவேப்லை, கொத்தமல்லி, சேர்த்து, பெருங்காயப்பொடிப் போட்டுநன்கு  கிளறி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
 மிக ருசியான, மணம் மிகுந்த  சாம்பார்.செய்து பார்த்து விட்டு,,உங்கள் கருத்துக்களை,
 girija46@ iCloud.com என்ற மெயிலுக்கு அனுப்பவும்

Wednesday, July 31, 2019

கோதுமை கடலை மாவு கட்லெட

தேவை:--கோதுமை மாவு, கடலை மாவு  தலா:---1கப்
வேகவைத்து. தோல் உரித்த. உருளைக்கிழங்கு--1;கொத்தமல்லி தழை, புதினா தழை,அலம்பி, ஆய்ந்தது---தலா--1கப்பு.பச்சை மிளகாய்------2,
உப்பு-----தேவையான அளவு. சீரகப்பொடி, ---1/2டீஸ்பூன்
செய்முறை:----புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை நன்றாக அரைத்து, அதனுடன் உருளைக்கிழங்கையும், உப்பு, சீரகப்பொடியையும், சேர்த்துநன்கு, பிசைந்து , மசாலாவை, ரெடிசெய்துவைத்துக்கொள்ளவும்.பின்பு கோதுமை மாவையும், கடலை மாவையும்,கலந்து,2டீஸ்பூன்
 எண்ணெய்யும், ஊற்றி ஈனோவை  கரைத்து , ஊற்றி, உப்பு  போட்டு,இட்லி மாவு பத த்திற்கு கரைத்துக் கொள்ளவும்.பின்பு , 4கிண்ணத்தில்,எண்ணெய் தடவி,முதலில் கொஞ்சம் மாவு  ஊற்றி,
பின்பு அதன்மேல் கிளறி. வைத்த மசாலாவை கொஞ்சம்  போட்டு, அதன்மேல், திரும்பியும்
மாவை  ஊற்றி, குக்கரில்வேகவைத்து ( லெட்  போடாமல்)10 நிமிடம், வேக விடவும்.ஆறியபிறகு
 தட்டில் வைத்து   நான்காக. வெட்டவும். வாணலியில். எண்ணெய் ஊற்றி,  வெட்டிய  கட்லெட்டுகளை, இரு பக்கமும் நன்கு. கோல்டன் கலராக. வரும் வரை வத்க்கி உண்ணவும்.
மிகவும், ருசியானதும் மணமானதும்  ஆகும்.
   செய்து பார்த்து உங்கள்  கருத்துக்களை,girija46@icloud.comஎன்ற இ மெயிலுக்கு அனுப்பவும்.


பொரி தோசை

பொரி தோசை
 தேவை:---பொரி---2கப்
அரிசி:---1கப்

தேங்காய் துருவல்----1/2கப்
 செய்முறை:--- பொரியையும், அரிசியையும், ஊறவைத்துக்கொள்ளவும் ஒருமணி. நேரம் கழித்து
இரண்டையும் சேர்த்து, அதனுடன், தேங்காயையும், சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்
நன்கு அரைத்த. பிறகு , தோசை   வார்க்கவும்.
 சைட் டிஷ்:-தக்காளித் தொக்கு,  தேங்காய், கொத்தமல்லி. சட்னி இருந்தால், மிகவும் ருசியாகவும்
மணமாகவும்.  இருக்கும்
செய்து  பார்த்து விட்டு,உங்கள்  கருத்துக்களை, girija46@icloud.com என்ற இ-மெயிலில் அனுப்பவும்